Sunday, June 28, 2009

செய்திப்பிரிவு தலைவராக

25+ வயதுகளிலேயே இதழியலிலும் எழுத்தியலிலும் வெற்றிக்கொடி கட்டிய கிராமத்து இளைஞர் இவர். எழுத்தோடும், இலக்கியங்களோடும் எந்த தொடர்பும் இல்லாத நடுத்தர வர்க்கத்து குடும்பத்தில் பிறந்தவர். 11 வயதிலேயே சிற்றிதழ்களில் எழுதத் தொடங்கிய கோமல் அன்பரசன், பள்ளிக்கூட பருவத்திலே த.மு.எ.ச. போன்ற இயக்கங்களின் நடவடிக்கைகளிலும் மாணவர் அமைப்புகளிலும். இதழ்களிலும் தம் பங்கெடுப்பை தொடங்கியவர்.

பள்ளிக்காலத்தில் "கவின்" என்ற கையெழுத்து இதழை நடத்தியதோடு, கல்லூரியில் "இளந்தூது" என்ற மாணவர் இதழுக்கு ஆசிரியராக இருந்தவர்.
கல்லூரியில் படிக்கும் போதே இவர் எழுதி வெளியிட்ட "சூரியப்பார்வைகள்" என்ற உரைவீச்சு தொகுப்பு, அந்த வயதில் இலக்கியத்தின் பால் அவருக்கிருந்த ஆளுமையையும், சமூக சீர்கேடுகளின் மீதிருந்த கோபக்கனலையும் வெளிப்படுத்தின.

அதன்பின் வெளிவந்த அவரது "மாண்புறும் மக்கள்" என்ற நூல் வெளியே தெரியாத சமூகப் பணியாளர்களை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது.

இவரது அடுத்த படைப்பான "செய்திகள். . . நிஜமும் நிழலும்" என்ற நூல் இதழியல் உலகின் நடைமுரை சிக்கல்களை படம் பிடித்து காட்டி, வித்தகர்கள் பலரின் வாழ்த்துகளைப் பெற்ற அற்புதமான புத்தகம். 30 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் கோமல் அன்பரசன், இதுவரை எழுதிய கட்டுரைகளும் கவிதைகளும் ஏராளம். இவைதவிர, இவரது படைப்பில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் பற்றிய சுவையான நூலும், ஊடகத்துறை பற்றிய சில நூல்களும் கவிதைத் தொகுப்பு ஒன்றும் அச்சேறி வருகின்றன.

இவை எல்லாவற்றையும்விட ஊடகத்துறையில் ஆரோக்கியமான சூழலுக்கு தம் பங்களிப்பை ஆற்றி வரும் கோமல் அன்பரசன் மிக, மிக இளம் வயதிலேயே மின்னணு ஊடகம் ஒன்றின் செய்திப் பிரிவுக்குத் தலைமையேற்று நடத்துபவர். ஆம்... மக்கள் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவு தலைவராக இருக்கிறார்.

- ஆ. பிரேமகுமார்
ஓய்வு பெற்ற ஆசிரியர் கம்பன் இலக்கிய கழகம்,
தேரழந்தூர்.
மயிலாடுதுறை

கோமல் ஆர்.கேவை பற்றி

11 வயதில் துணுக்கு எழுத்தாளராக பத்திகைத் துறையில் கால் பதித்த இவருக்கு மயிலாடுதுறையை அடுத்த கோமல் சொந்த ஊர்.

கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த தேரழுந்தூரில் நிசா பிரைமரி பள்ளி மற்றும் யூசுபியா தொடக்கப்பள்ளியில் ஆரம்பப் படிப்பு! கோமல் அரசு மேல்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வி. மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை படிப்பு, மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் தங்கப்பதக்க மாணவன்!

கல்லூரி மாணவர் இதழ் “இளந்தூது” வை 21-ம் நுற்றாண்டுக்கு அழைத்து வந்த இதழாசிரியர்! படிக்கும்போதே “சூரியப்பார்வைகள்” புத்தகத்தை எழுதி வெளியிட்ட நூலாசிரியர், அப்போதே பத்திரிக்கைகளில் பகுதிநேர செய்தியாளர்! பின்னர் செய்தியாளர்!

மயிலாடுதுறை “நம்ம ஊரு செய்தி” யின் துணை ஆசிரியர், பிறகு அதன் பொறுப்பாசிரியர்! இப்போழுது தென்னிந்தியாவில் முதலிடத்திலிருக்கும் சன் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவில் செய்திகளை வடிக்கும் பொறுப்பான பணி கூடவே “நம்ம ஊரு செய்தி” இதழின் கௌரவ பொறுப்பாசிரியர்!

சன் தொலைக்காட்சியில் இது வரை சுமார் 200 சிறப்புப்பார்வைகள், 400க்கும் மேற்பட்ட செய்தி தொகுப்புகளை அளித்து அனைவரின் பாராட்டை பெற்றிருப்பவர். சுனாமி தாக்குதல், வீரப்பன் கொலை உள்ளிட்ட நிகழ்வுகளில் சன் தொலைகாட்சி செய்தியின் பொறுப்பாசிரியராக இருந்து செய்தி கொடுத்த ஆற்றலாளர்.

இதழியல் குறித்து எழுதிய “செய்திகள்... நிஜமும் நிழலும்” என்ற நூல் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நூலின் வெளியீட்டு விழா மயிலாடுதுறையில் கடந்த ஆண்டு பெரிய இலக்கிய திருவிழாவாகவே நடைபெற்றது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகம் ஆகியவற்றில் இதழியல் மாணவர்களுக்கு இவரது நூலை பாடமாக வைக்க பரீசிலனை நடைபெற்று வருகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நூலை திருவையாறு தமிழய்யா கல்விக்கழகம் சிறந்த நூலாக தேர்ந்தெடுத்து பொற்கிழி வழங்கியது. மேலும் “இதழாய்வுச் செம்மல்” விருதும் வழங்கியுள்ளது (இந்த நூலின் சிறப்பு குறித்து இதழியல் அறிஞர்களின் கருத்து தனியாக இணைக் கப்பட்டுள்ளது)

கோமல் அன்பரசனின் மற்றொரு நூலான “மாண்புறும் மக்கள்”, மயிலாடுதுறை பகுதி மண்ணின் மைந்தர்களை அறிமுகப்படுத்தும் அருமையான நூல்! அதன் மூலம் குன்றிலிட்ட விளக்காக சேவையாற்றிய பலரை வெளியுலகுக்கு அறிமுகபடுத்தி ஏகோபித்த பாராட்டைபெற்றவர்.

பள்ளிக்கூட பருவத்திலிருந்து 15 ஆண்டுகளாக இதழியலில் இருக்கும் கோமல் அன்பரசன், எழுத்தாளர் மட்டுமல்ல, நல்ல பேச்சாளர்! நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளை சிறப்பாக ஒருங்கினைத்து நடத்தியவர்! சமூக சேவையில் ஆர்வம் மிக்கவர்! ஈடுபடும் பணிகளில் சலியாத உழைப்பாளி! நண்பர்களின் நன்னமம்பிக்கை மனை! மொத்தத்தில் சாதிக்கப் பிறந்தவர்!

25 வயதிலேயே புகழேணியில் ஏறத்தொடங்கிய கோமல் அன்பரசனின் பயணம், வெற்றியின் உச்சத்தை நோக்கி தொடர்கிறது.


குடும்பத்தைப் பற்றி...

பெற்றோர் - ஆர்.கே. என்று அன்போடு அழைக்கப்படும்
ஆர்.கண்ணையன், ஆர்.கே.கோமதி.

உடன்பிறந்தவர் - ஆர்.கே. கருணாநிதி பொறியாளர்,
பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பொறுப்பு

வாழ்க்கைத்துணைவி - காயத்ரி அன்பரசன்
(முதுநிலை வணிக மேலாண்மையியல் பட்டதாரி)

Blogger template 'BubbleFish' by Ourblogtemplates.com 2008